சென்னை,ஜூன் 19- இந்திய கடற்பகுதியில் 1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு, மீத்தேன் எரிவாயு இருப்பதை சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில், அதிக அளவுக்கு மீத் தேன் எரிவாயு இருப்பதாக, மத்திய புவி அறிவியல் துறை ஏற்கனவே கண்டறிந்தது. இந்நிலையில், சென்னை, ஐ.ஐ.டி.,யின் கடலியல் பொறி யியல் மாணவர்கள் குழு, இந்திய கடற்பகுதிகளில் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வில், இந்தியாவின் கடல் எல்லைக் குள், ஆழ் கடலில் வாயு படி மங்கள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இந்த படிமங்களை அளவிட்டதில், 1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன், அவற்றில் எடுக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இது தற்போது, இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள மீத்தேன் அளவை விட, மூன்று மடங்கு அதிகம் என்று சென்னை, ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வெப்ப அழுத்தம், கடலுக்கடி யில் படிமங்களின் மீது அழுத்தம் கொடுப்பது, ரசாயனத்தை புகுத்தி எடுப்பது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பாலிமர் பயன்படுத்தியும், மீத்தேன் வாயுவை எடுக்கலாம் என்றும் ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.